3 வாரத்தில் களம் காண்கிறார் யுவராஜ்

நுரையீரல் கட்டியால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இப்போது குணமடைந்து வருகிறார். அவர் 3 வாரங்களில் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்பார் என்று அவருடைய தாயார் ஷப்னம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் களத்திலும், வெளியிலும் புதிய யுவராஜ் சிங்கைப் பார்க்கலாம். யுவராஜின் வாழ்க்கையே மாறியுள்ளது.

எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார்.

அவர் எப்போதுமே போராடும் குணமுள்ளவர். இப்போதும் பலமானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் உருவெடுத்துள்ளார்.

அவர் தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

அவருடைய நுரையீரலில் ஏற்பட்ட கட்டி அபாயகரமானது என்பதை அவர் அறிந்திருந்தாலும், அந்த வலியை அவர் யாரிடமும் பகிந்து கொண்டதில்லை.

அது முழுமையாகக் குணமடைய இன்னும் சில நாள்கள் ஆகலாம். அதை பொறுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றார்.

0 comments:

Post a Comment