சென்னையில் இன்று கிரிக்கெட் கொண்டாட்டம்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், இதில் சேவக் மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என இந்திய அணி தொடரை வென்றது. முக்கியமில்லாத ஐந்தாவது மற்-றும் கடைசி போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.


அதிரடி தொடருமா:

சச்சின், தோனி, யுவ-ராஜ் சிங் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாத போதும், இளம் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்துகிறது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சேவக், முதன் முறையாக தொடரை வென்றுள்ளார்.

சென்னையில் அன்வர் (பாக்.,1997) இதற்கு முன் 194 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் இன்று @சவவக் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம். இத்தொடரில் இதுவரை 284 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, விராத் கோஹ்லி (163) நல்ல "பார்மில்' இருப்பதால் கவலை இல்லை.

காம்பிர் (83), ரெய்னா (62) இருவரும் ரன்கள் சேர்க்க முயற்-சிக்க வேண்-டும்.


அஷ்வின் எதிர்பார்ப்பு:

டெஸ்ட் தொடரில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஒரு நாள் தொடரில் இதுவரை 4 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். சுழலுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் இவர் எழுச்சி பெறுவார் என நம்பலாம். அறிமுக அசத்தல் ராகுல் சர்மா, ரவிந்திர ஜடேஜா விக்கெட் வேட்டை இன்று தொடர வேண்டும்.

ரஞ்சி கோப்பை தொடரில் 4 போட்டியில் 21 விக்கெட் வீழ்த்திய இர்பான் பதானுக்கு, இன்று வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம். மற்றபடி வினய் குமார், அபிமன்யு மிதுன் சுமார் தான்.


பொறுப்பான ஆட்டம்:

பிராவோ, ராம்தின், ரசல், சிம்மன்ஸ் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீசின் "டாப் ஆர்டர்" வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். ஒருபோட்டியில் எழுச்சி பெற்றால், அடுத்த முறை சொதப்புகின்றனர்.

இன்று கவனமாக செயல்பட்டால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம். கேப்டன் சமி உட்பட பலரும் எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விடுகின்றனர். இன்று இந்தப்பிரிவில் அக்கறை காட்ட வேண்டும்.

கீமர் ரோச், ராம்பால் துல்லியமாக பந்துவீசுவது அணிக்கு பலம் என்றால், சமி, போலார்டு, ரசல் ரன்கள் வழங்குவதில் "வள்ளலாக' உள்ளது பெரும் பலவீனமாக உள்ளது. கடந்த முறை ஏமாற்றிய "சுழலில்' சுனில் நரைன், ஆடுகளத்தின் உதவியுடன் இன்று பந்தை நன்கு சுழற்றலாம்.


ரசிகர்கள் ஆர்வம்:

மோசமான வானிலை காரணமாக, தமிழக அணி சென்னையில் விளையாடிய ரஞ்சிக் கோப்பை போட்டி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள், இன்றைய விறுவிறுப்பான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment