ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ராகுல் டிராவிட் தேர்வு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகமானது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இத்தொடரின் 5-வது சீஸன் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக, ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல்.-ன் முதல் முன்று சீசன்களிலும் ராகுல் டிராவிட் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.

கடந்த 4 -வது சீசனில்தான் ராஜஸ்தான் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 4 சீசன்களிலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்து வந்தார்.

அவருடைய தலைமையின் கீழ் 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment