சச்சின் 100வது சதம் அடிப்பாரா?

ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் 100வது சதம் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன்,'' என, ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை துவங்குகிறது. இதில் இந்திய வீரர் சச்சின் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்து கிளார்க் கூறியது:

இந்திய வீரர் சச்சின் நீண்ட ஆண்டுகளாக, நம்ப முடியாத அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பேட்டிங்கை' ரசித்து பார்ப்பேன்.

இவர் சர்வதேச அரங்கில் 100வது சதத்தை நிச்சயமாக அடிப்பார். மெல்போர்னில் சச்சினின் ஆட்டத்தை காண நிறைய ரசிகர்கள் வருவர்.

இவருக்கு ஆதரவு அதிகம் இருக்கும். இவர் 100வது சதம் அடிக்க வாழ்த்துகிறேன். ஆனால், இம்முறை இந்த சாதனை வேண்டாம். வேறு அணிக்கு எதிராக அல்லது அடுத்த தொடரில் வேண்டும் என்றால் அடித்துக் கொள்ளட்டும்.

முதல் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்களை அறிவித்துள்ளோம். இவர்கள் முதல் டெஸ்டில் வெற்றி தேடித் தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

மிட்சல் ஸ்டார்க், கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, பாண்டிங், ஹசி ஆகியோருடன் நானும், ஒரு சில ஓவர்கள் பவுலிங் செய்வோம். டேவிட் வார்னர் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், பவுலராகவும் கலக்க காத்திருக்கிறார்.
மைதானத்தில் எந்தவிதமான ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபடக்கூடாது என அணியினரை எச்சரித்துள்ளேன். மீறுபவர்கள் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் (சி.ஏ.,) கடும் நடவடிக்கை எடுக்கும். டெஸ்ட் தொடருக்காக நல்ல முறையில் தயாராகி உள்ளோம். எனவே ஐந்து நாளும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெற்றி பெறுவோம். நாளை "டாஸ்' வெல்லும் வாய்ப்பு கிடைத்தால், பேட்டிங் தான் தேர்வு செய்வோம்.
இவ்வாறு கிளார்க் கூறினார்.

0 comments:

Post a Comment