சச்சினுக்கு ஆதரவாக தீர்மானம்

நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதை, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்க வேண்டும் என, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களும், இவ்விருது பெறலாம் என, மத்திய அரசு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

இதன்படி கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினும் இவ்விருதை பெற வாய்ப்பு வந்துள்ளது.

இதற்கு எம்.சி.ஏ., ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் துணைத்தலைவர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்,"" சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களது வேண்டுகோளை, மகாராஷ்டிரா அரசு மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்து எங்களது செயலர்கள், மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதுவார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment