தோனிக்கு பயங்கரவாதிகள் குறி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் உயிருக்கு பயங்கரவாத அமைப்புகள் குறி வைத்துள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. "டுவென்டி-20 (2007), 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர். தற்போது ஓய்வில் உள்ளார்.

இவருக்கு மாவோயிஸ்ட் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்," தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு, மாவோயிஸ்ட், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகள் குறி வைத்துள்ளனர்.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் போலீசார், தோனியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கடந்த வாரம் ஏர்போர்ட்டில் இருந்து ஹார்மு ஹவுசிங் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு தோனி சென்ற போது, ஒரு ஜீப் நிறைய துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

இது தவிர, இவரது வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் "கமாண்டோ போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment