நூறாவது டெஸ்டில் நூறாவது சதம் எகிறுகிறது எதிர்பார்ப்பு

சிட்னி மைதானத்தில் நடக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் சச்சின், நூறாவது சதத்தை எட்டுவார் என, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ல் சிட்னியில் துவங்குகிறது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட் என்ற பெருமை பெறுகிறது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன்...

சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது...

சச்சின் வீடு ரூ. 100 கோடிக்கு இன்சூரன்ஸ்

மும்பையில் சச்சின் கட்டியுள்ள புதிய வீடு, ரூ. 100 கோடிக்கு "இன்சூரன்ஸ்' செய்யப்பட்டுள்ளது.இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர் சமீபத்தில் மும்பை, பாந்த்ரா பகுதியில் 5 மாடி கொண்ட புதிய வீடு கட்டி குடியேறினார். இந்த வீட்டை இரு பிரிவுகளாக பிரித்து சச்சின் இன்சூரன்ஸ் செய்துள்ளார். முதல் பிரிவு தீ விபத்து. அதாவது தீ, பயங்கரவாத நடவடிக்கைகளால், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு, குண்டு வெடிப்பு, திருட்டு உள்ளிட்டவைகள் ஏற்படும் பாதிப்புக்கு ரூ....

மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து, பீட்டர் சிடில் வேகத்தில் "கிளீன் போல்டானார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் ஹாடின் (21), பீட்டர் சிடில் (34) அவுட்டாகாமல்...

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்

சர்வதேச விளையாட்டில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பானதாகவே அமைந்தது. கிரிக்கெட்டில், உலக கோப்பை(50 ஓவர்) வென்றது. ஹாக்கியில், ஆசிய சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கால்பந்தில், தெற்காசிய சாம்பியனாக மகுடம் சூடியது. இதை தவிர, டென்னிஸ், பாட்மின்டன், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா அல்லது ஏமாற்றமே மிஞ்சியதா என பார்ப்போம்...தீபிகா பல்லிகல்:ஸ்குவாஷ் போட்டியை பொறுத்தவரையில், சென்னை வீராங்கனையான தீபிகா பல்லிகல், 20, அசத்தினார். இந்த ஆண்டு மட்டும் ஆரஞ்ச் கவுன்டி ஓபன், கலிபோர்னியா ஓபன், ஹாங்காங் தொடர் என, மூன்று சர்வதேச...

இந்திய அணிக்கு அக்ரம் அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட், மெல்போர்னில் இன்று ஆரம்பமாகிறது.இதுகுறித்து அக்ரம் கூறியதாவது: சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் களமிறங்கி உள்ள இந்திய அணி, போதிய அனுபவமில்லாத ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதிக...

சச்சின் 100வது சதம் அடிப்பாரா?

ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் 100வது சதம் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன்,'' என, ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை துவங்குகிறது. இதில் இந்திய வீரர் சச்சின் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்து கிளார்க் கூறியது:இந்திய வீரர் சச்சின் நீண்ட ஆண்டுகளாக, நம்ப முடியாத அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பேட்டிங்கை' ரசித்து...

மீண்டும் சுழல் புயல்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கும்ளே (இந்தியா), வார்ன் (ஆஸ்திரேலியா), முரளிதரன் (இலங்கை) ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற, சுழற்பந்துவீச்சு துறையில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டது. தற்போது அஷ்வின், ஹபீஸ், சயீத் அஜ்மல் போன்ற திறமையான வீரர்களின் வரவால், சுழற்பந்துவீச்சு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 1930 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் சுழற்பந்துவீச்சின் மூலம், 732 விக்கெட்டுகள்...

முதல் டெஸ்டில் சச்சின் 100வது சதம்

ஆஸ்திரேலிய மண்ணில், சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை பதிவு செய்வார். இந்த சாதனையை முதல் டெஸ்டில் படைக்க வாழ்த்துகிறேன், என, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. இத்தொடரில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்,...

அம்பயர்கள் முட்டாள்களா?: "டிவி' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரசிகர்களுக்காக "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை "சேனல்-9' பயன்படுத்துவது, களத்தில் இருக்கும் அம்பயர்களை முட்டாள்களாக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்கவில்லை. தவிர, இங்கிலாந்து தொடரில் கிடைத்த "கசப்பான' அனுபவம் காரணமாக, "ஹாட் ஸ்பாட்' முறையும் வேண்டாம் என பி.சி.சி.ஐ.,...

ஆஸி., தொடரில் "ஹாட் ஸ்பாட்' இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை பயன்படுத்த பி.சி.சி.ஐ., மறுப்பு தெரிவித்துள்ளது.அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறைக்கு ஏற்கனவே இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டால் மட்டுமே டி.ஆர்.எஸ்., முறையை அமல்படுத்த முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. "ஹாட் ஸ்பாட்' எப்படி?கடந்த இங்கிலாந்து...

ராகவேந்திரா பயிற்சியில் சச்சின்

முதல் தர போட்டியில் கூட பங்கேற்காத ராகவேந்திரா என்பவரது பந்துவீச்சில், பயிற்சி மேற்கொண்டார் சச்சின்.இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதத்தை எடுக்க, தீவிர முயற்சி செய்து வருகிறார். இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் ஏற்படும் "அவுட் சுவிங்' பவுலிங்கை சந்திக்க, நம்பகமான ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை பார்த்து வருகிறார் ராகவேந்திரா, 27. இவர் இதுவரை எவ்வித முதல் தர போட்டிகளிலும் பங்கேற்றது இல்லை. இருந்தாலும், இவரது "அவுட் சுவிங்' பந்து வீசும் திறன்,...

சச்சினை வீழ்த்துமா சாப்பல் திட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர், 31 டெஸ்டில் 11 சதங்கள் உட்பட 3,151 ரன்கள்(சராசரி 60.59...

சச்சினுக்கு ஆதரவாக தீர்மானம்

நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதை, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்க வேண்டும் என, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களும், இவ்விருது பெறலாம் என, மத்திய அரசு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது. இதன்படி கிரிக்கெட்...

இந்திய அணியின் அடுத்த வாரிசுகள்

இந்திய அணியின் "பிக்-3' என்றழைக்கப்படும் சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த இடத்தை நிரப்ப தகுதியான இருவராக ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உருவெடுத்துள்ளனர்.இந்திய அணியின் "மிடில் ஆர்டரில்' கங்குலி ஓய்வுக்குப் பின், அந்த இடம் சரியாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடத்துக்கு பத்ரிநாத், புஜாரா, ரெய்னா, யுவராஜ் என மாறி, மாறி வந்தும் இன்னும் யாரும் நிலைத்த பாடில்லை. இந்நிலையில் தற்போதைய அணியின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும்...

பகலிரவு டெஸ்ட் போட்டி - டிராவிட் விருப்பம்

டெஸ்ட் போட்டியை காப்பாற்ற வேண்டும். இதற்காக பகலிரவு டெஸ்ட் அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது பற்றி ஐ.சி.சி., பரிசீலிக்க வேண்டும்,'' என, இந்திய வீரர் டிராவிட் கேட்டுக் கொண்டார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள டிராவிட், வரலாற்று சிறப்பு வாய்ந்த பிராட்மேன் நினைவு உரையாற்றினார். இதன் மூலம், இந்த உரை நிகழ்த்தும் முதலாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார். மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய டிராவிட், டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்....

மவுனத்தை கலைத்தார் கும்ளே - ராஜினாமா பின்னணி

பி.சி.சி.ஐ., மற்றும் கும்ளே இடையிலான மோதல் முற்றுகிறது. தனது தொலைநோக்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தான், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கும்ளே தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார். போதிய நேரம் இல்லாததால், இப்பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,)...

கும்ளே திடீர் ராஜினாமா

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ளே. தற்காலிக தலைவராக பாண்டோவ் நியமிக்கப்பட்டார்.இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார். இப்படி பல பொறுப்புகளில் இருப்பதால், போதிய நேரம் இல்லாததால், தேசிய கிரிக்கெட் அகாடமியின்...

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் எப்போது?

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடக்கலாம்.ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரை நடத்துவது குறித்து ஐ.பி.எல்., நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.சமீபத்தில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தினால்...

நம்பியது நடந்தது - தோனி

சச்சினின் 200 ரன்கள் சாதனையை சேவக் மட்டுமே முறியடிக்க முடியும் என, எப்போதும் நம்பினேன் இது சரியாக நடந்துள்ளது,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.இந்தூரில் நடந்த நான்காவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்து இரட்டை சதம் அடித்த சேவக், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (219) எடுத்தவர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இந்திய அணியின் கேப்டன் தோனி, சேவக் சாதனை குறித்து...

சென்னையில் இன்று கிரிக்கெட் கொண்டாட்டம்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், இதில் சேவக் மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என இந்திய அணி தொடரை வென்றது. முக்கியமில்லாத ஐந்தாவது மற்-றும் கடைசி போட்டி, இன்று சென்னை...

பாராட்டு மழையில் சேவக்

ஒரு நாள் போட்டியின், ஒரே இன்னிங்சில் 219 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்த சேவக்கிற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இவரது "ரோல் மாடல் சச்சின் உட்பட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாயார பாராட்டியுள்ளனர்.இந்தூரில் நேற்று முன் தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 219 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் சேவக், ஒரு நாள் அரங்கில் புதிய வரலாறு படைத்தார். இவர், வீரர் சக வீரர் சச்சினின் சாதனையை முறியடித்தார்....

தோனிக்கு பயங்கரவாதிகள் குறி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் உயிருக்கு பயங்கரவாத அமைப்புகள் குறி வைத்துள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. "டுவென்டி-20 (2007), 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர். தற்போது ஓய்வில் உள்ளார். இவருக்கு மாவோயிஸ்ட் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்," தோனி உள்ளிட்ட பல முக்கிய...

தோல்விக்கு என்ன காரணம்?

மூன்றாவது ஒருநாள் போட்டியில் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, கேப்டன் சேவக் தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது. நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது....