சச்சின், ஹர்பஜனுக்கு ஓய்வு

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின், ஹர்பஜன், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஆக.,10-28) இலங்கையில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அனுபவ வீரர்களான சச்சின், ஹர்பஜன் மற்றும் முழங்கால் பகுதியில் காயமடைந்த காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.மீண்டும் யுவராஜ்: மோசமான "பார்ம்' காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட...

இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.தென்னாப்பிரிக்க அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 111 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-வது இடங்களிலும், பாகிஸ்தான் 84 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.ஒருநாள் போட்டி:ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 115 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 4-வது...

இந்தியா "நம்பர்-1' அணியா?

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் இந்தியா, "நம்பர் -1' அணி போல தோன்றவில்லை,'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி (124 புள்ளிகள்). இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் படுதோல்வி அடைந்தது.இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஆனால் பவுலிங், பலவீனமாக உள்ளது. காயம்...

பிராட்மேன் சாதனையை தகர்த்த ஜெயவர்தனா

ஒரே மைதானத்தில் அதிக சதம் அடித்து, ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார் ஜெயவர்தனா.கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் ஜெயவர்தனா, சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 28 வது சதமாக அமைந்தது. தவிர, கொழும்பு, சின்கிளைஸ் ஸ்போர்டஸ் கிளப் மைதானத்தில், இவர் அடிக்கும் 10 வது சதம் இது. இதன் மூலம் ஒரே மைதானத்தில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜெயவர்தனா. இதற்கு முன், முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், மெல்போர்ன் மைதானத்தில் 9 சதம் அடித்ததே சாதனையாக...

உலக சாம்பியன் கனவு

பாட்மின்டன் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில், இளம் வீராங்கனை செய்னா நேவல் (20 வயது) முக்கியமானவர்.சமீபத்தில் நடந்த இந்திய கிராண்ட்பிரிக்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அசுர வளர்ச்சி கண்டுள்ள இவர், ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்துக்கு அதிரடி முன்னேற்றம் கண்டார். இருப்பினும் இவருக்கு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. இவரது சமீபத்திய செயல்பாட்டின்மூலம், இக்கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பிரான்ஸ்...

பதிலடி கொடுக்குமா இந்தியா ?

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது.பலமான பேட்டிங்: முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட தவறினர். இந்த...

சச்சின் செய்தது சரியா ?

பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இளம் தலைமுறையினரின் "ரோல் மாடலாக' திகழும் இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக முன்னணி எழுத்தாளர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சேவை பணிக்கு நிதி திரட்டவே, இது போன்ற முயற்சியில் சச்சின் ஈடுபட்டுள்ளதால், தவறாக நினைக்க தேவையில்லை என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின்...

முரளீதரன் சாதனையை முறியடிப்பது கடினம்

டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் முரளீதரன் பெற்றார். அவரது சாதனை குறித்து பிரபல வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:- வாசிம் அக்ரம்:- முரளீதரன் ஒரு அபூர்வமான வீரர். அவரது 800 விக்கெட் சாதனையை முறியடிப்பது கடினம். அவரை நெருங்க முடியாது என்று கருதுகிறேன். கும்ப்ளே:- 15 ஆண்டுகளுக்கு முன்பு யாராலும் 800 விக்கெட் தொட முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று இந்த இமாலய சாதனையை முரளீதரன் பெற்றுள்ளார். அதுவும் 133 டெஸ்டில் 800 விக்கெட் என்பது நினைத்தே பார்க்க முடியாதது ஆகும். சங்ககரா:- இனி இன்னொரு முரளீதரனை பார்க்க...

முரளிதரன் சுழல் கடினமானது

ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.இதுகுறித்து கங்குலி கூறியதாவது: டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான்...

டெஸ்ட் அரங்கிலிருந்து விடை பெற்றார் முரளிதரன்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார் முரளிதரன். கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார். இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார்.இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். 8 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர், முதலில் வேகப்பந்துவீச்சளாராக தான் இருந்தார். பின் 14வது வயதில் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இவரது சர்வதேச...

சச்சினின் ரத்த சரித்திரம்

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட...

யுவராஜ் சிங்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, வரி செலுத்தாமல் உள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சண்டிகர் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 3 தொடர்கள் நடந்துள்ளன. இத்தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றனர். ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் விளையாடினார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இவருடன் இணைந்து வி.ஆர்.வி.சிங், சன்னி சோஹல், உதய் கவுல் ஆகியோர் பஞ்சாப்...

மறக்க முடியாத தருணம்

தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடரில், தனது மின்னல் வேக ஆட்டத்தால் உருகுவே அணிக்கு பலம் சேர்த்தார் டீகோ போர்லான். இத்தொடரில் 5 கோல்கள் அடித்த இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வழங்கப்படும் "கோல்டன் பால்' விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் தென் அமெரிக்க நாடுகள் சார்பில் இவ்விருதை கைப்பற்றும் 4 வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு முன் அர்ஜென்டினாவின் மாரடோனா (1986), பிரேசிலின் ரொமாரியோ (1994) மற்றும் ரொனால்டோ (1998) ஆகியோர் இவ்விருது வென்றுள்ளனர். உயரிய விருது வென்ற மகிழ்ச்சியில் போர்லான் அளித்த பேட்டி:*...

800 விக்கெட்: முரளீதரன் முனைப்பு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகிறார் முத்தையா முரளீதரன். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 792 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலே நகரில் தொடங்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையோன தொடரின் முதல் ஆட்டத்துடன் ஓய்வு பெறப் போவதாகவும் அதன் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாகவும் முரளீதரன் அறிவித்துள்ளார்....

சச்சினுக்காக உலக கோப்பை

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்காக, வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,'' என முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. கடந்த 1992ம் ஆண்டு முதல், 5 உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, ஒரு முறைகூட தனது அணிக்கு உலக கோப்பை...

உலக கோப்பையில் 145 கோல்கள்

உலக கோப்பை கால்பந்து அரங்கில் கோல் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. அதன் பின் கடந்த 2002ல் ஜப்பான்-தென் கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பை தொடரில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன.இம்முறை தென் ஆப்ரிக்காவில் நடந்த 19வது உலக கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 145 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இருப்பினும் "உவுசெலா' மூலம் எழுப்பப்பட்ட ஒலி, ரசிகர்களின் வித்தியாசமான "மேக்கப்', "ஆக்டோபஸ்' ஆருடம் என...

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், சச்சின், டிராவிட், தோனி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரும் ஏமாற்றம் அளித்தனர். யுவராஜ் சதம், காம்பிர் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தனர். இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் சுழலில் மிரட்டிய மெண்டிஸ், 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி காலேயில் நடக்கிறது. இதற்கு முன் இந்தியா, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன....

விளம்பர ஒப்பந்தம்: தோனி சாதனை

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க்கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு,...