காம்பிருக்கு இடம் கிடைக்குமா? - இன்று இந்திய அணி தேர்வு



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில், கேப்டன் தோனி இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது. இதனால், காம்பிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

முத்தரப்பு தொடருக்குப் பின், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட (ஜூலை 24- ஆக., 3) தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் ஹராரேயிலும், கடைசி இரு போட்டிகள் புலவாயோவில் நடக்கும். 

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் தோனி முத்தரப்பு தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே தொடர் குறித்து இவரது முடிவு என்ன என, இன்னும் தெரியவில்லை. 

ஒருவேளை தோனிக்கு ஓய்வு தரப்படும் பட்சத்தில், கேப்டன் பணியை விராத் கோஹ்லி தொடர்வார். தோனிக்குப் பதில் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட "அனுபவ' காம்பிர் (147 போட்டி, 5238 ரன்) அணியில் இடம் பெறலாம்.

 ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. இதனால், முரளி விஜய் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. "மிடில்-ஆர்டரில்' மனோஜ் திவாரி தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், முழங்காலில் காயம் அடைந்ததால், புஜாராவுக்கு வாய்ப்பு செல்லும்.


பிரவீண் வருவாரா:

பவுலிங்கில் தற்போது அணியிலுள்ள ஒன்று அல்லது இரு வீரர்களுக்கு ஓய்வு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரவீண் குமார் அணிக்கு திரும்பலாம். ஷமி அகமது அணியில் நீடிப்பார். 

ஏற்கனவே அணியிலுள்ள சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இதனால், ராகுல் சர்மா இடம் பெறுவது சந்தேகம் தான். 

0 comments:

Post a Comment