முத்தரப்பு தொடரில் சூதாட்டம் - 5 பேர் கைது



இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் பைனல் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இந்திய அணி, இலங்கையை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பை வென்றது. 

இந்தப்போட்டியின்போது, டில்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, லாலித், நிதின், பவான், மோகித், ஜிதேந்தர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" இவர்கள் பிரிமியர் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் சுமார் ரூ. 1.5 கோடிக்கு சூதாட்டம் செய்துள்ளனர். 

இவர்கள் பயன்படுத்திய இரண்டு "லேப்-டாப்' மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தோம்,'' என்றார். 

0 comments:

Post a Comment