ஆஸ்திரேலிய அணி இன்னும் 2 ஆண்டுக்கு திணறும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2 டெஸ்டிலும் தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

ஆஸ்திரேலிய அணியின் நிலைமை அடுத்த 2 ஆண்டுக்கு இது மாதிரியே இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இங்கிலாந்தின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் 2 ஆண்டுக்கு ஆஸ்திரேலியா இது மாதிரியே திணறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளே இதற்கு காரணம். 

1980-ம் ஆண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி போல தற்போதைய அணி இருக்கிறது.

0 comments:

Post a Comment