இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட முதல் காஷ்மீர் வீரர்



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் என்ற  கிரிக்கெட் வீரர் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்திய அணிக்குள் நுழையும் முதல் காஷ்மீரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.  

கலவரங்களால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடிவைக்கும் போதெல்லாம் வெறிச்சோடி இருக்கும் பிஜ்பெஹாரா நகரத் தெருக்களில் விளையாடி ரசூல்  தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொண்டார். 

கடந்த 2009ஆம் ஆண்டில் தீவிரவாத செயல்களுடன் தொடர்பு கொண்டவர் இவர் என்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் வெளியே காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்.  

முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி, ஜம்மு, காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றார். இவரே, இந்திய அணியில் ரசூல் இடம் பெறுவதற்கும் காரணமாக இருந்துள்ளார். 

ஒரு எளிய கடை முதலாளியின் மகனான ரசூல்(வயது24), அணியின் நடுத்தர வரிசை ஆட்டக்காரராகவும், சிறந்த ஆப்-ஸ்பின் பந்து வீச்சாளராகவும் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.  இந்த வருட ஆரம்பத்தில் புனே வாரியர்ஸ் அணிக்காக டி20 போட்டியில் ரசூல் விளையாடினார். 

அதேபோல், இந்தியா ஏ பிரிவினருக்கான அணியிலும் விளையாடிய முதல் காஷ்மீரி என்ற பெருமையைப் பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய அணியினருடன் போர்டு பிரெசிடெண்ட் XI அணியில் விளையாடியபோது, 45 ரன்கள் கொடுத்து 7  விக்கெட்டுகளை எடுத்தார். 

சென்ற ரஞ்சிப் போட்டிகளின் போதும் ஜம்மு,காஷ்மீர் மாநில அணியில் விளையாடி 594 ரன்களும், 33 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இவரது மூத்த சகோதரர் ஆசிப் உள்ளூர் டி20 போட்டிகளில் மாநில அணியில் விளையாடியுள்ளார்.  இவரது பயிற்சியாளரான அப்துல் கையும், இவரது தேர்வு குறித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்ககளையும் வெளியிட்டுள்ளார்

0 comments:

Post a Comment