ரவிந்திர ஜடேஜா விலை மதிப்புமிக்க வீரர் - கபில்தேவ்

இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய அணியில் தற்போது விலை மதிப்பு மிக்க வீரராக ரவிந்திர ஜடேஜா இருக்கிறார். அவரது வருகைக்கு பிறகு அணியில் மிகுந்த வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக ஜடேஜா உள்ளார்.

தனது பேட்டிங், பவுலிங் மற்றும் துல்லியமான பீல்டிங்கினால் அவர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். தனது திறமையின் மூலம் அவர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

ஷேவாக், யுவராஜ்சிங், காம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களே கொண்ட இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அடுத்த தலைமுறைக்கான வீரர்கள் அணிக்கு வந்து இருக்கிறார்கள். இந்த அணி 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாட இருக்கிறது.

1983–ம் ஆண்டு நான் வென்ற உலக கோப்பையை விட 2011–ம் ஆண்டு டோனி பெற்ற உலக கோப்பைக்கான சவாலானது. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உலக கோப்பையை வெல்ல இதைவிட கடுமையாகவும், சவாலாகவும் இருக்கும்.

கேப்டன் பதவியில் டோனி சிறப்பாக செயல்படுவது பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல தேவையில்லை. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ஆவார்.

நாங்கள் அவரை மதிக்கிறோம். அவரை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. தற்போதைய நிலையில் அவர் தான் சிறந்த கேப்டன்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment