அதிவேகமாக 15 சதங்கள் எடுத்த வீரர்

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலிக்கு இது 15-வது சதமாகும்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15-வது சதத்தை 106-வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143-வது போட்டியில் 15-வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144-வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147-வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள்.

இந்திய சாதனை சிகரம் சச்சின் தெண்டுல்கர் 15-வது சதத்தை தனது 182-வது ஆட்டத்தில் தான் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment