சாம்பியன்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பாரா?


கால் விரலில் காயமடைந்துள்ள இந்திய வீரர் சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் வரும் செப்., 23 முதல் அக்., 9 வரை நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை துவங்குகின்றன. 

இதில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், ஏற்கனவே பெருவிரல் காயத்தால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர், இத்தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் பயிற்சியாளர் ராபின் சிங் கூறியது:

ஐ.பி.எல்., தொடருக்காக எப்படி தயாராகி இருந்தோமோ, அதுபோலவே இப்போதும் "ரெடி'. இங்கிலாந்து தொடரில் பாதியில் திரும்பிய ஹர்பஜன் சிங், கட்டாயம் பங்கேற்பார். சச்சின் பங்கேற்பது உறுதியில்லாமல் உள்ளது. 

இவர் பங்கேற்காவிட்டாலும், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவரது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் தங்களை நிரூபித்து வெற்றிதேடித் தருவார்கள். 

இவ்வாறு ராபின் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment