சேவக் மீது கிராம மக்கள் புகார்

சர்வதேச பள்ளியை துவக்கிய சேவக் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஒப்பந்தப்படி இவர், கிரிக்கெட் பயிற்சி அகாடமியை அமைக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர், அரியானாவில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதனை ஏற்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சிலானி கே÷ஷா கிராம மக்கள், மிக குறைந்த விலைக்கு(ஒரு ஏக்கர் ரூ. 3 லட்சம்) 23 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

இங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் சர்வதேச பள்ளியை சேவக் நிறுவியுள்ளார். இப்பள்ளியில் "மெகா கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

இதனை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஒப்பந்தப்படி பயிற்சி அகாடமி அமைக்காமல், பள்ளியை துவக்கிய சேவக் பெருமளவில் பணம் சம்பாதிப்பதாக புகார் கூறினர்.

இவரது இந்த திட்டத்தால் வளரும் வீரர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினர்.

இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தர் பிரகாஷ் கூறுகையில்,""கிராம மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கிரிக்கெட் அகாடமி தவிர, பள்ளி ஒன்றும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,என்றார்.

0 comments:

Post a Comment