2012ல் இந்தியா-பாக்., மோதல்?


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையில், 2012 தொடர் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது.

கடந்த 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், 2009 ஜனவரியில் பாகிஸ்தான் செல்ல இருந்த தனது பயணத்தை, இந்திய கிரிக்கெட் அணி ரத்து செய்தது. 

இதன் பின், இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதின.
இந்நிலையில் இரு அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவை ஏற்படுத்த, ஐ.சி.சி., தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 

சமீபத்தில் ஐ.சி.சி., சார்பில் அறிவிக்கப்பட்ட எதிர்கால அட்டவணையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் 2012, மார்ச்-ஏப்ரலில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் படி இரு அணிகள் இடையே மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் நடக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) தலைவர் இசாஸ் பட் கூறுகையில்,"" இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து, இரு நாட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகளுடன் விவாதித்து வருகிறோம். கட்டுப்பாடுகள், விதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்,'' என்றார்.

1 comments: