கொச்சி அணி அதிரடி நீக்கம்

விதிகளை மீறிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா. ரூ. 1,550 கோடிக்கு வாங்கப்பட்டது கொச்சி அணி, இத்தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என்பது விதி. இதற்காக ஒவ்வோரு ஆண்டும் ரூ. 153 கோடி செலுத்த வேண்டும்.

இதனிடையே கொச்சி அணி துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்தது. அணி உரிமையாளர்கள் யார் என்று சொல்வதில் துவங்கியது முதல் பிரச்னை. இதுகுறித்து அப்போதைய தலைவர் லலித் மோடி, மத்திய அமைச்சர் சசிதரூர் இடையே மோதல் வெடித்தது. இதில் இருவரது பதவிகளும் பறிபோனது. பின் அணியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டது.

அடுத்து ஒப்பந்தப்படி நடக்க இருந்த 18 போட்டிகளை, ஐ.பி.எல்., நிர்வாகம் 14 ஆக குறைத்தது. இதனால் தங்கள் உரிமத்தொகையில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என, கொச்சி அணியுடன் சேர்ந்து, புனேயும் கோரிக்கை விடுத்தது.

இதை பி.சி.சி.ஐ., நிராகரித்தது. ஒருவழியாக சமாதானமாகி, கடந்த ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணி பங்கேற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு தரவேண்டிய தொகையை, கொச்சி அணியினர் இன்னும் தராமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து கொச்சி அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறியது:

வழக்கமாக செலுத்த வேண்டிய தொகையை தராமல், கொச்சி நிர்வாகிகள் விதிகளை மீறி செயல்பட்டனர். சரி செய்ய முடியாத அளவுக்கு விதிகளை மீறியுள்ளனர். இதனால், கொச்சி அணியின் உரிமம் ரத்துசெய்யப்படுகிறது.

மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை. இதையடுத்து அவர்கள் ஏற்கனவே செலுத்தி இருந்த வங்கி <உத்தரவாத தொகையை, இழப்பீடாக பி.சி.சி.ஐ., எடுத்துக்கொள்கிறது.

கொச்சி அணிக்குப் பதிலாக புதிய அணியை சேர்ப்பது, இதற்காக புதியதாக ஏலம் நடத்துவது உட்பட எவ்வித முடிவும், ராஜிவ் சுக்லா தலைமையிலான ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.


கொச்சி எதிர்ப்பு:

பி.சி.சி.ஐ.,யின் இந்த முடிவுக்கு கொச்சி அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் இயக்குனர் முகேஷ் படேல் கூறுகையில்,"" பி.சி.சி.ஐ.,க்கு நாங்கள் எந்த பாக்கியும் தரவேண்டியது இல்லை.

உண்மையில் ஆண்டு வருவாயில் ரூ. 12 முதல் 15 கோடிவரை அவர்கள் தான் அடுத்த மாதம் எங்களுக்கு தரவேண்டியது உள்ளது. இந்நிலையில் எங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யது சட்ட விரோதமானது. இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment