தோனி, ஜடேஜா அரைசதம்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தோனி, ஜடேஜா இருவரும் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தனர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி, கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. "டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு பார்த்திவ் படேல் (3), ரகானே (0), சீனியர் டிராவிட் (2), விராத் கோஹ்லி (7) விரைவில் பெவிலியன் திரும்பினர். ரெய்னா (21) நிலைக்கவில்லை.

பின் தோனி, ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, சர்வதேச அரங்கில் 39 வது அரைசதம் கடந்தார்.

இவருக்கு நல்ல "கம்பெனி கொடுத்த ஜடேஜா, ஐந்தாவது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில், 69 ரன்கள் எடுத்த தோனி அவுட்டானார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 78 ரன்கள் எடுத்து திரும்பினார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது.

அஷ்வின் (36), பிரவீண் குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

0 comments:

Post a Comment