சச்சினுக்கு டிராவிட் ஆதரவு

ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சச்சினின் கருத்துக்கு, இந்திய அணியின் "சீனியர்' வீரர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க, பல புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தெரிவித்து இருந்தார். இதற்கு ஐ.சி.சி., சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டிராவிட் கூறியது:

ஒருநாள் போட்டிகளை நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும் என்ற சச்சினின் கருத்து வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற முறையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே போட்டிகள் நடந்துள்ளன. இதிலுள்ள நன்மை, தீமைகள் குறித்தும் ஏற்கனவே தெரியும்.

இந்நிலையில், சச்சினின் கருத்தை ஐ.சி.சி., நிராகரித்தது ஏன் என தெரியவில்லை.

தற்போதுள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது.

இதனால், டி.ஆர்.எஸ்., முறையில் உள்ள குறைகள் குறித்து, கிரிக்கெட் போர்டு, ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment