ஸ்ரீசாந்த் புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், புதிய அவதாரம் எடுத்துள்ளார். உலக கோப்பை அணியில் இடம் பெறாத இவர் "எஸ்-36' இசைக்குழுவை துவக்கியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரீசாந்த். சமீபத்திய தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு, உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து இருந்த இவர், தற்போது "எஸ்-36' என்ற இசைக்குழுவை துவக்கியுள்ளார்.

இதில் "எஸ்' என்பது ஸ்ரீசாந்த் என்பதையும், 36 என்பது இவரது ராசியான "டி-சர்ட்டையும்' குறிக்கும். இந்த குழுவில் பின்னணி பாடகர் மது பாலகிருஷ்ணன், தீபக் வாரியர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக்குழுவின் முதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கொச்சியில் நடந்தது. இதில் <உலக கோப்பை தொடரில் பங்கேற்கும், இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதத்தில், இவர் எழுதிய "ஹலோ ஷேர் பங்கே...' எனத்துவங்கும் இந்தி பாடலை மேடையில் பாடி அசத்தினார்.

தவிர, "அன்புள்ள அழகே...' என்ற பாடல் <உட்பட பல தமிழ் பாடலையும் பாடினார். காமினி என்ற இந்திப்படத்தின் பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில்,"" இந்தக்குழுவில் இணைந்து பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனம் ஆடுவது, பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பது என அனைத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக செய்யவுள்ளேன். ஏனெனில் என்னைவிட சிறந்தவர்கள் இதில் உள்ளனர். நான் அவர்களுக்கு ஆதரவாக மட்டும் இருப்பேன்,'' என்றார்.

இந்தக்குழு துபாயில் முறைப்படி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சண்டிகரில் பல நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

துபாய் நிகழ்ச்சியில், தென் இந்தியா மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment