ஐ.பி.எல். பஞ்சாப் அணி சம்பள பாக்கியை தரவில்லை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் இலங்கை வீரர் சங்ககரா, ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அவர்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் ஒப்பந்தப்படி உரிய சம்பளத்தை முழுமையாக பஞ்சாப் அணி உரிமையாளர்கள் வழங்க வில்லை.

அவர்கள் பல முறை பணத்தை கேட்டும் பஞ்சாப் அணி வழங்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தது.இதையடுத்து சங்ககரா ஷான்மார்ஸ் இருவரும் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதில் கிரிக்கெட் சங்கம் தலையிட்டு சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது தொடர்பாக கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறும் போது இந்த பிரச்சினை எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஆட்சி மன்ற குழுவில் விவாதித்து இருக்கிறோம் என்றார். ஆனால் இதுபற்றி பஞ்சாப் அணி செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் கேட்டதற்கு வீரர் களுக்கு அனைத்து சம்பள பாக்கியையும் வழங்கி விட்டோம் என்றார்.

இதே போல ராஜஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் பலருக்கும் முழுமையான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன

0 comments:

Post a Comment