ஐ.சி.சி. கனவு அணியில் தெண்டுல்கர்- ஷேவாக்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இதுவரை விளையாடிய வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்ய ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு செய்தது. இதற்காக முதலில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவற்றில் இருந்து 11 வீரர்களை ஐ.சி.சி. இணைய தளம் மூலம் ரசிகர்கள் தேர்வு செய்தனர். 97 நாடுகளில் இருந்து 6 லட்சம் பேர் இதில் வாக்களித்தனர். இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி. கனவு அணியில் இந்தியாவை சேர்ந்த தெண்டுல்கர், ஷேவாக், முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டோனி, கும்ப்ளே, ஹர்பஜன், கங்குலிக்கு வாய்ப்பு இல்லை.

2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு (434 ரன்) எதிராக தென் ஆப்பிரிக்கா 438 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. சிறந்த ஒரு நாள் போட்டியாக தேர்வு செய்யப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் ஐ.சி.சி. கனவு அணி வருமாறு:-

தொடக்க வீரர்கள்: தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா)

மிடில் ஆர்டர்: லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பாண்டிங் (ஆஸ்திரேலியா).

ஆல்ரவுண்டர்: கபில்தேவ் (இந்தியா).

விக்கெட் கீப்பர்: கில் கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)

வேகப்பந்து வீரர்கள்: வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), மெக்ராத் (ஆஸ்திரேலியா) ஆலன் டொனால்டு (தென் ஆப்பிரிக்கா).

சுழற்பந்து வீரர்: முரளீதரன் (இலங்கை)

12-வது வீரர்: பெவன் (ஆஸ்திரேலியா)

0 comments:

Post a Comment