இந்தியாவின் வெற்றிக்கு சச்சின் உதவுவார்

கடைசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய உதவியாக இருப்பார்,'' என்று, முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 19 முதல் ஏப்., 2 வரை நடக்கிறது. இதுகுறித்த கடந்த 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வீந்தர் சிங் சாந்து (54) கூறியது:

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் தான், தனக்கு கடைசி என்பது சச்சினுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அவரது கவனம் முழுவதும் இதில் தான் உள்ளது. கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக, 100 சதவீதத்துக்கும் அதிகமான திறமையை இவர் வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

மனரீதியாக இத்தொடருக்கு தயாராக உள்ள சச்சின், உடல் அளவில் இன்னும் தயாராகவில்லை. இருந்தாலும், இந்திய அணி கோப்பை வெல்வதற்கு, சச்சின் பெரும் உதவியாக இருப்பார். அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனுபவம் வாய்ந்த இவர், அணியில் இருப்பதால் மற்ற வீரர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

யுவராஜ், யூசுப் பதான், தோனி போன்ற வீரர்கள் அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிக்கு கொண்டு செல்லும் திறமை படைத்தவர்கள். எந்த நிலையிலும் இவர்கள் சோர்ந்துவிடக் கூடாது. எங்களது காலத்தில் மற்றவீரர்கள் விளையாடுவதை நேரில் பார்த்து தான், அவர்களது திறமையை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் வீடியோவில் பார்த்து தெரிந்து அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம். இதற்கு தகுந்த பயிற்சியாளர்களும் உள்ளனர். அவர்கள் உதவியுடன் இந்திய அணி சாதிக்கலாம். தவிர,


கறுப்பு குதிரைகள்:

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கறுப்பு குதிரைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், மீண்டும் அவர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றுள்ளதால், இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு தெரியும். தவிர, ஐ.பி.எல்., அணிகளில் பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும், தங்களது வீரர்களுக்கு தேவையான தகவல்கள் அளிப்பது உறுதி.

கடந்த 1983 தொடரில், திறமையாக விளையாடும் பட்சத்தில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்று நம்பினேன். அதுபோல, கவாஸ்கர், யஷ்பால் சர்மா, மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் <உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மற்ற வீரர்கள் இயல்பான ஆட்டத்தை தொடர இந்திய அணி கோப்பை வெல்ல முடிந்தது. அதுபோல, கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, நெருக்கடியை மறந்து சிறப்பாக சாதிக்கும் பட்சத்தில் கோப்பை வெல்லமுடியும்.

இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறினார்.

0 comments:

Post a Comment