உலக கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. பெரிய அளவில் மாற்றம் ‌‌‌‌இல்லை. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.18-ஏப்.2) தொடரை நடத்துகின்றன.

இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கடந்த மாதம் அறிவித்தது.

இதிலிருந்து உலக கோப்பைக்கான கிரிக்கெட் அணியில் பங்குபெறும் வீரர்கள் , 15 பேர் கொண்ட அணி,இன்று சென்னையில் அறிவிக்கப்பட்டனர்.

பி.சி.சி.ஐ., தேர்வாணைய குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் பி.சி.சி.ஐ,.செயலர் சீனிவாசன் வீரர்கள் பெயர்களை அறிவித்தார்.


இதன் விவரம் வருமாறு:

தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர் கான், பிரவீண் குமார், முனாப் படேல். நெஹ்ரா,அஷ்வின்,பியுஸ் சாவ்லா, யூசுப் பதான்.

அஷ்வின் தமிழக வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment