ஐ.பி.எல்., தொடரில் 14 லீக் போட்டிகள்

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் "டுவென்டி-20' தொடர் நடந்து வருகிறது. நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு ஏப். 8 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது.

இந்த முறை புதிதாக இணைக்கப்பட்ட கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனையடுத்து பங்கேற்கும் அணிகள் மற்றும் அவை மோத உள்ள அணிகளின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டுள்ளது.

இதன் படி, 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளிலும்,வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி, புனே வாரியர்ஸ், கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும், வெளியூரில் தலா 2 போட்டிகளில் விளையாடும். தவிர, டில்லி, டெக்கான் அணிகளுடன் உள்ளூரிலும், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக வெளியூரிலும் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது.


போட்டி அட்டவணை

அணி எதிரணிகள் (உள்ளூர் மற்றும் வெளியூர்) உள்ளூரில் மட்டும் வெளியூர் மட்டும்

புனே டில்லி,டெக்கான்,பஞ்சாப்,மும்பை,சென்னை கொச்சி,கோல்கட்டா பெங்களூரு, ராஜஸ்தான்

டில்லி டெக்கான்,பஞ்சாப்,மும்பை,புனே,கொச்சி கோல்கட்டா,பெங்களூரு ராஜஸ்தான், சென்னை

டெக்கான் பஞ்சாப்,மும்பை,புனே,டில்லி,கோல்கட்டா பெங்களூரு,ராஜஸ்தான்
சென்னை, கொச்சி

பஞ்சாப் மும்பை,புனே,டில்லி,டெக்கான்,பெங்களூரு ராஜஸ்தான்,சென்னை கொச்சி, கோல்கட்டா

மும்பை புனே,டில்லி,டெக்கான்,பஞ்சாப்,ராஜஸ்தான் சென்னை,கொச்சி கோல்கட்டா, பெங்களூரு

சென்னை கொச்சி,புனே,கோல்கட்டா,பெங்களூரு,ராஜஸ்தான் டில்லி,டெக்கான் பஞ்சாப், மும்பை

கொச்சி கோல்கட்டா,பெங்களூரு,ராஜஸ்தான்,சென்னை,டில்லி டெக்கான்,பஞ்சாப் மும்பை, புனே

கோல்கட்டா பெங்களூரு,ராஜஸ்தான்,சென்னை,கொச்சி,டெக்கான் பஞ்சாப்,மும்பை புனே, டில்லி

பெங்களூரு ராஜஸ்தான்,சென்னை,கொச்சி,கோல்கட்டா,பஞ்சாப் மும்பை,புனே டில்லி,டெக்கான்

ராஜஸ்தான் சென்னை,கொச்சி,கோல்கட்டா,பெங்களூரு,மும்பை புனே,டில்லி டெக்கான், பஞ்சாப்


ரஞ்சி வீரர்களுக்கு வாய்ப்பு

ரஞ்சிக் கோப்பை மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடி வரும், இந்திய வீரர்களை நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் தேர்வு செய்ய ஐ.பி.எல்., அணிகளுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.

இதன் படி, இத்தொடர்களில் கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின் காலடி வைத்துள்ள இளம் வீரர்களுக்கு ரூ. 10 லட்சமும், 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையில் இடம் பெற்ற வீரர்களுக்கு ரூ. 20 லட்சமும், 2005 ம் ஆண்டு முதல் விளையாடி வரும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த வீரர்கள் ஏலத்தில், ரூ. 40 கோடியை செலவு செய்ய பி.சி.சி.ஐ., அனுமதி அளித்திருந்தது. ஏலத்தில் செலவு செய்தது போக, மீத பணம் வைத்திருக்கும் அணிகள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

சர்வதேச வீரர்களைப் போல இவர்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.

0 comments:

Post a Comment