தொடரை வென்றால் மட்டுமே 'பார்ட்டி'

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான டிராவிட் கூறுகையில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றோம்.

டர்பனில் நடந்த போட்டியில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியை நாங்கள் பெரிதாக கொண்டாடவில்லை.

கேப்டவுன் டெஸ்டிலும் வெற்றி பெற்றால்தான் எங்களுடைய பயணம் முழு வெற்றியை பெறும். அதற்காகக் காத்திருக்கிறோம்.

எங்களுடைய எண்ணம் எல்லாம் அந்தப் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது தான். அதற்கு பின்னர் தான் வெற்றியை கொண்டாடு வோம் என்றார்.

0 comments:

Post a Comment