ஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்

தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு. காயம் காரணமாக வீரர் சேவக் நீக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, வரும் ஜன.9ம் தேதி "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கிறது. அதன்பின் அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் சேவக், தோள் பட்டை காயம் காரணமாக விலகினார். கடந்த மே மாதம், தோள் பட்டை காயம் காரணமாக இவர், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.

ஆனால் இவர் வரும் ஜன.2ம் தேதி கேப்டவுனில் துவங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார். ஒருநாள் தொடரில் இவருக்கு பதிலாக ரோகித் சர்மா புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் முரளி விஜய் ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ""தோள் பட்டை காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகும் படி சேவக் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக ரோகித் சர்மா விளையாடுவார். தவிர, அணியில் 17வது வீரராக முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.


இந்திய அணி விபரம்:

தோனி (கேப்டன்), காம்பிர், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல், அஷ்வின், யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா.

0 comments:

Post a Comment