உலகக் கோப்பையை வெல்லாமல் சச்சின் ஓய்வு பெறமாட்டார்

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தராமல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமாட்டார் என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.

2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என சிலர் கூறிவருகின்றனர். ஒருவேளை, அதில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டால், உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும் வரை சச்சின் ஓய்வு பெறமாட்டார்.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். சச்சினின் ஓய்வு குறித்து கருத்துக் கூறுவது முறையானதல்ல. இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் அவரின் பங்களிப்பு அவசியம்.

அவரின் ஆட்டத்திறனும், அனுபவமும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். சச்சினின் ஆட்டத்தைக் காண்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று தில்லியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கபில்தேவ் தெரிவித்தார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சச்சின். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வருகிறார். கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேனே தன்னுடன் சச்சினை ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்

0 comments:

Post a Comment