இந்தியா சிறப்பாக ஆடினாலும் உலக கோப்பையை வெல்வது கடினம்

இந்திய அணியின் சமீப கால வெற்றிகள் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-

காம்பீர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுள்ளது. ஆனாலும் உலககோப்பை போட்டிகளை சந்திக்க இது போதாது.

உலக கோப்பை போட்டி வேறு மாதிரியான அனுபவமாக இருக்கும். எனவே தகுந்தமாதிரி தயாராக வேண்டும். உலக கோப்பையை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னேறி செல்ல வேண்டும்.

இதற்கு நாம் முழு தகுதியோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டுமானால் அடுத்து நடக்கும் தென்ஆப்பிரிக்கா போட்டியிலும் வெல்ல வேண்டும். தென்ஆப்பிரிக்கா மண்ணில், அதன் சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமானது. அதில் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருக்கும். அந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி தொடரும்.

கொல்கத்தா அணியில் மீண்டும் நான் இடம்பெற மாட்டேன் என்று அனுமானமாக சொல்வதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இந்த அணியில் நான் 3 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அணி மீது எனக்கு அதிக பற்றுதல் உள்ளது.

ஆனாலும் இதில் அணி உரிமையாளர்களின் முடிவே முக்கியம். ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நான் அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இதுவரை அணி உரிமையாளர் ஷாருக்கானுடன் பேசவில்லை.

ஒருவேளை கொல்கத்தா அணியில் இடம் பெறாத பட்சத்தில் ஏலம் மூலம் வேறு அணிக்கு சென்று ஆடுவேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment