ஐபிஎல்(4) போட்டியில் கொச்சி அணி கலந்து கொள்ளலாம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் 8 அணிகள் பங்கேற்றன.கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் புதிதாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் புனே அணி ரூ.1,702 கோடிக்கும், கொச்சி அணி ரூ.1,533 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

கொச்சி அணியில் ஆங்கர் எர்த், பிரினி டெவலப்பர்ஸ், ரோசி புளு, பிலிம்வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதியுள்ள 20 சதவீத பங்குகள் ரெண் டஸ்வாஸ் ஸ்போர்ட்ஸ் வேல்டு நிறுவனத்திடம் இருந்தது. ஏலத்தின்போது இந்த நிறுவனம் வெற்றிக்கு உதவியதால் இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன.இதனால் மற்ற பங்குதாரர்களுக்கு இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக பங்குகளை விற்கப்போவதாக அறிவித்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது.


கொச்சி அணி பங்குதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்சினை முடிக்க அந்த அணிக்கு கிரிக்கெட் வாரியம் 3 முறை காலக்கெடு விதிக்கப்பட்டது


இதற்கிடையே 10 சதவீத பங்குகளை மட்டுமே வைத்து கொள்வதாக ரெண்டஸ் வாஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இது குறித்து ஐ.பி.எல். அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கொச்சி அணிக்கு பிரச்சினைகள் இருக்காது என்று கூறப்பட்டது.


இதற்கிடையே விதிக்கப்பட்ட காலக்கெடு இன்று முடிந்தது,எனவே அந்த அணி கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்க மும்பையில் இன்று ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டப்பட்டது. கூட்டத்தில் கொச்சி அணி கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

1 comments:

  1. தகவலுக்கு மிக்க நன்றி...

    எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete