ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது.

ஏற்கனவே 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களில் 12 பேர்தான் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை, மும்பை அணியிலும் தலா 4 பேரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 பேரும், டெல்லி, பெங்களூர் அணியில் தலா ஒருவரும் நீடிக்கப்பட்டு உள்ளனர்.

மொத்தம் 421 வீரர் ஏலப்பட்டியலில் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 350 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.

ஏலத்தில் உள்ள முக்கிய வீரர்கள் நாடு வாரியாக வருமாறு:-

இந்தியா: காம்பீர், யுவராஜ் சிங், யூசுப் பதான், ஜாகீர்கான், டிராவிட், கங்குலி, கும்ப்ளே, நெக்ரா.

ஆஸ்திரேலியா: கில்ஹிஸ்ட், மைக்ஹஸ்சி, ஷான் மார்ஷ், பெர்ட்லீ, வார்னர், நானஸ்

இங்கிலாந்து: பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான், மார்கன், பிரையர்.

இலங்கை: தில்சான், சங்ககரா, ஜெயவர்த்தனே, மெண்டீஸ்.

தென் ஆப்பிரிக்கா: சுமித், காலிஸ், டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன்.

வெஸ்ட்இண்டீஸ்: லாரா, டாரன் பிராவோ, வெய்ன் பிராவோ, கிறிஸ்கெய்ல்.

நியூசிலாந்து: வெட்டோரி, மேக்குல்லம், டெய்லர்.

0 comments:

Post a Comment