ஐ.பி.எல்.லுடன் கை கோத்தது ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன்

ஐபிஎல் போட்டியின் 5-வது மற்றும் 6-வது சீசனில் அதிகாரப்பூர்வ விளம்பர பங்குதாரராக ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் துறையில் உள்ள முன்னணி நிறுவனமான வோல்க்ஸ்வேகன் ஒப்பந்தம் செய்துள்ளது.


தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கூட்டத்திற்குப் பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.


வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியின் முதல் சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.


வோல்க்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐபிஎல் ஆணையர் சிரயூ அமீன் தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் ஐபிஎல் 5 மற்றும் 6-வது சீசனில் மைதானங்களில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் விளம்பரங்கள் பெருமளவில் இடம்பெறும்.

0 comments:

Post a Comment