கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின்

டெஸ்டில் 50 சதம் அடித்து புதிய வரலாறு படைத்த தெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோர் தெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெண்டுல்கரின் 50-வது சதம் வியக்கதக்கது. இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெண்டுல்கரின் 50-வது மிகப்பெரிய அற்புதமான சாதனையாகும். கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி அணியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். சச்சின் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த்: (தேர்வுக்குழு தலைவர், முன்னாள் கேப்டன்):- கிரிக்கெட் உலகின் கடவுளாக தெண்டுல்கர் திகழ்கிறார். மனித இயல்புக்கு அப்பாற்பட்ட திறமையுடன் உள்ளார். 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் வியக்கத்தக்க வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆடி வருகிறார். பல்வேறு இக்கட்டான நிலையில் அவர் ரன்களை எடுத்து வருகிறார்.

கிர்மானி (முன்னாள் விக்கெட் கீப்பர்):- எல்லா சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தெண்டுல்கர். அவர் இன்னும் ரன்களை வேட்டையாடும் வேட்டையில் உள்ளார். அவரது சாதனைக்கு இது மேலும் ஒரு மைல்கல் ஆகும். அவரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

வெங்சர்க்கார் (முன்னாள் கேப்டன்): தெண்டுல்கரின் ஆட்டம் இன்னும் அற்புதமாக இருக்கிறது. நம்பமுடியாத வகையில் அவரது வரலாற்று சாதனை உள்ளது. அறிமுகம் ஆனபோது எப்படி இளமையுடன் ஆடினாரோ அதே திறமையுடன் இன்னும் ஆடி வருகிறார். வெளிநாட்டு மண்ணில் அவர் சிறப்பாக ஆடுவதை மற்ற வீரர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும்.

யுவராஜ்சிங்: எந்த ஒரு பேட்ஸ்மேனும் செய்யாத சிறந்த சாதனையை தெண்டுல்கர் செய்துள்ளார்.

அப்துல்காதிர் (பாகிஸ்தான் முன்னாள் வீரர்): தெண்டுல்கர் அறிமுகம் ஆன போது வாக்கர்யூனிஸ் பந்தை எப்படி திறமையாக கையாண்டாரோ அதே திறனுடன் தற்போதும் உள்ளார். அவர் ஒரு அசாதாரண வீரர். சிறப்பு திறமைகள் இருக்கிறது. உண்மையிலேயே இது வியக்கத்தக்க அற்புதமான சாதனையாகும்.

மதன்லால் (முன்னாள் இந்திய வீரர்): நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

ஒபிரையன் (நியூசிலாந்து வீரர்): தெண்டுல்கருக்கு எனது வாழ்த்துக்கள் அவர் கிரிக்கெட்டின் சகாப்தம் ஆவார்.

கிரிஸ்டன் (இந்திய அணி பயிற்சியாளர்): பேட்டிங் செய்யும் போது அவர் ஒரு பேராசிரியராக திகழ்கிறார். ஆட்டத்தின் நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார்

0 comments:

Post a Comment