ரோகித் மாற்றத்திற்கு காரணம்

மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபின்தான், ரோகித்தின் ஆட்டத்தில் மாற்றம் உண்டானது,'' என, இந்திய அணி ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் இந்தியாவின் ரோகித் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். அணியின் முன்னிலைக்கு கைகொடுத்த இவர் குறித்து கவாஸ்கர் கூறியது: 

இந்த ஆண்டு ரோகித்துக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிரிமியர் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்தான், இவரது ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 

இதற்கு முன்பும் கூட, இவரிடம் திறமை இருந்தது. ஆனால், விக்கெட்டின் மதிப்பு இவருக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, கேப்டன் பதவி ஏற்றதுதான், ரோகித்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 


அசத்திய அஷ்வின்:

முக்கியமாக, கேப்டன் தோனி இவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதன்படி, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

சக வீரர் அஷ்வினும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எப்படி செயல்பட்டராரோ, அதைத்தான் நேற்றும் வெளிப்படுத்தினார். தவிர, நெருக்கடியை சிறப்பாக எதிர் கொண்டார். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

0 comments:

Post a Comment