5,000 டிக்கெட்டுக்கு 1.9 கோடி பேர் போட்டி

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள், 15 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட். இத்துடன் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெறுகிறார். 

வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டிக்காக, ரசிகர்களுக்கு 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுவும் இணையதளத்தில் பெற முடியும் என்பதால், விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்தில், சுமார் 1.9 கோடி பேர் முற்றுகையிட்டனர். 

இதனால், இணையதளம் ஒட்டுமொத்தமாக முடங்கியது. கடைசியில் இவற்றை சரிசெய்த பின், விற்பனை துவங்கிய 15 மணி நேரத்தில், டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. 

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்ட அறிக்கையில்," ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே தரப்பட்டன. இவர்கள் தகுந்த ஆதாரங்களை கொடுத்து, வான்கடே மைதானத்துக்கு செல்ல டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 

ஒருசிலருக்கு டிக்கெட் கொடுக்கப்படாத நிலையிலும், அவர்களது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இவற்றை தற்போது திரும்ப தந்து கொண்டுள்ளோம்,' என, தெரிவிக்கப்பட்டது. 

0 comments:

Post a Comment