மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, ஆடல்-பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. 

விழாவில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். 

அப்போது, சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள கான்திவிலி மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முறைப்படி அறிவித்தது. 

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில், தங்க நாணயத்தில் டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.  டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் சச்சின் படத்துடன் 5 வண்ணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment