இந்திய அணி தேர்வாளர்களுக்கு தடை

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணியினருடன் செல்ல, தேர்வுக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் போது, நிர்வாகிகள், அணித் தேர்வாளர்கள் உடன் செல்வதுண்டு. ஆனால், இவர்களுக்கு எவ்வித வேலையும் கிடையாது. 

இதனிடையே, இந்திய அணி மூன்று ஒருநாள் (டிச., 5, 8, 11), இரண்டு டெஸ்ட் (டிச., 18-22, டிச., 26-30) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது. 

அப்போது, அணித் தேர்வாளர்கள் உடன் செல்லமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்குப் பதில், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதாம். இதனால் தான், சச்சின் ஓய்வு பெற்ற போட்டியைக் காண, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் நேரில் வரவில்லையாம். 

இவர், ரஞ்சி கோப்பை போட்டிகளை பார்க்க சென்று விட்டாராம். ஏனெனில், எதிர்கால இந்திய அணிக்கு சரியான வீரர்களை கண்டறிய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


உண்மையான காரணம்:

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வருமானம் குறைந்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு, ஏர்டெல் நிறுவனம் ஸ்பான்சராக இருந்த போது சர்வதேச போட்டி ஒன்றுக்கு ரூ. 3.3 கோடி கொடுத்தது. 

இது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதனால், கடந்த அக்., 3 முதல் ஈ.எஸ்.பி.என்., மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பை பெற்றது. ஆனால், ரூ. 1.3 கோடி குறைவாக, அதாவது ரூ. 2 கோடி மட்டுமே தருகிறது. 

தவிர, இந்திய அணியின் நீண்ட கால ஸ்பான்சர் சகாராவும் விலகிக் கொண்டது. இதனால், ஏற்பட்டுள்ள வருமான இழப்பை சரிக்கட்ட, இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment