இந்திய அணிக்கு ஸ்பான்சர் யார்?

இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய, ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' சகாரா நிறுவனம் கடந்த 2001, ஜூன் 2ல் ரூ. 4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் "சகாரா' பெயர் கொண்ட "ஜெர்சி' இல்லாமல் பார்க்கவே முடியாது. 

பின், 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது சகாரா. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை இட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).

பின் 2010ல் ஒருவழியாக புனே பிரிமியர் அணியை வாங்கியது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இந்தியா மற்றும் புனே அணியின் "ஸ்பான்சரில்' இருந்து விலகுவதாக, கடந்த பிப்., 4ல் நடந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த அக்., 27ல் புனே அணி உரிமத்தை, பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இப்போது 9 மாதங்கள் கழித்து, இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆண்கள், 19 வயது, "ஏ' அணி மற்றும் பெண்கள் அணிக்கு, 2014, ஜன. 1 முதல் 2017, மார்ச் 31 வரை "ஸ்பான்சர்' செய்ய, புதிய ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்காக, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள விண்ணப்பங்கள், மும்பை வான்கடே மைதானத்தில் நவ., 11 முதல் டிச., 7 வரை கிடைக்கும். இவை டிச., 9, மதியம் 3.00 மணி வரை ஏற்கப்படும். அன்று ஒப்பந்தங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட "ஸ்பான்சர்' அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment