கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதே - சச்சின் உணர்ச்சிவசம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின். மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் வெற்றியுடன் கிளம்பினார். 
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதத்தில் "சதம்' அடித்து சாதித்தவர். 463 ஒருநாள் (18,426 ரன்கள்), ஒரு "டுவென்டி-20' (10 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்ற சச்சின், தனது 200வது டெஸ்ட் (15,921 ரன்கள்) போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி, வெற்றி பெற்றது. இத்துடன் கிரிக்கெட் உலகில் இருந்து விடை பெற்ற சச்சின் கூறியது:
நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுகிறேன். 

எனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

முதலில் எனது தந்தை. கடந்த 1999ல் என்னை விட்டுச் சென்றார். இவரது வழிநடத்தல் இல்லையென்றால், இப்போது உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது. இன்று அவர் இல்லாதது வருத்தம் தான்.


அம்மாவுக்கு நன்றி: 

அடுத்து எனது அம்மா. என்னை குழந்தையில் எப்படி வளர்த்தார் என்று தெரியாது. ஆனால், கிரிக்கெட் விளையாடத் துவங்கிய நாளில் இருந்து எனக்காக, தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார். 

0 comments:

Post a Comment