
உலக கிரிக்கெட்டில் "சதத்தில்' சதம் அடித்து சாதித்தவர் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சச்சினின் சக வீரர்கள், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் அளித்த பேட்டி:
* சச்சினின் கடைசி டெஸ்டில் பங்கேற்று, அவருடன் "டிரசிங்' ரூமில் இருக்கும் அனுபவம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டதே?
யுவராஜ்: இது மிகப்பெரிய ஏமாற்றம் தான். இது மிகவும் சோகமானது.
ஹர்பஜன்: சச்சினின் கடைசி இரு டெஸ்டில் பங்கேற்று இருக்க வேண்டும். இது சச்சினை நெருக்கமாக இருந்து பாராட்ட உதவியிருக்கும். ஏனெனில், சச்சினின் ஓய்வு உணர்ச்சி வசமானது. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான். இது இல்லாமல் அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.
0 comments:
Post a Comment