சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டியில் சர்ச்சை

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கு, ரசிகர்களுக்கு வெறும் 5000 டிக்கெட் தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நவ., 14ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட் . இப்போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். 

இதனால், டிக்கெட் பெறுவதில் கடுமையான போட்டி காணப்படுகிறது. வான்கடே மைதானத்தில் மொத்தமுள்ள 33,000 டிக்கெட்டில், 5,000 மட்டும், ரசிகர்களுக்கு தரப்படுகிறது. மீதமுள்ளவை, "ஸ்பான்சர்', வி.வி.ஐ.பி., மற்றும் பல்வேறு முக்கிய கிளப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை மைதானத்தில் விற்கும் பட்சத்தில், கவுன்டர்களில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்க, எம்.சி.ஏ., டுதூச்த்ணிணிணஞ்ச்.ஞிணிட் என்ற இணையதளத்துடன் கைகோர்த்துள்ளது. 

இதுகுறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிடின் தலால் கூறுகையில்,"" கிரிக்கெட் உலக நட்சத்திரம் சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட், வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க, உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்தது மகிழ்ச்சி,'' என்றார்.


ரசிகர்கள் புலம்பல்:

கிரிக்கெட் என்பது மக்களுக்காகத் தான், நிறுவனங்களுக்கானது அல்ல. இப்படித்தான் ஈடன் கார்டன் போட்டியில், ரசிகர்களுக்கு குறைந்தளவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. மீதமுள்ளவை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதனால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன என, ரசிகர்கள் புலம்பினர்.


ஒருவருக்கு 2 மட்டும் தான்

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டிக்கு நபர் ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டும் தரப்படுகிறது. இதன் விலை ரூ. 500, ரூ. 1000 மற்றும் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது.


ரகசிய திட்டம்

கடந்த 2011 உலக கோப்பை தொடர் பைனலின் போது, டிக்கெட்டுகளை டுதூச்த்ணிணிணஞ்ச்.ஞிணிட் நிறுவனம் தான் விற்றது. ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டுமே என்பதால், ஒரே நேரத்தில் பலரும் முற்றுகையிட, இணையதளம் முடங்கியது. இதைப் பயன்படுத்தி 100 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. 

நேற்று மீண்டும் இந்த இணையதளம் முடங்கியது. இதனால், சச்சினின் 200வது டெஸ்ட் டிக்கெட்டை பெற முடியாமல் ரசிகர்கள் அவதிப்படுகின்றனர். 

0 comments:

Post a Comment