நடுவரின் தவறான முடிவு - தெண்டுல்கரின் அவுட் டில் சர்ச்சை

தெண்டுல்கர் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு நடந்து வந்துபோது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி வரவேற்றனர்.
199–வது டெஸ்டில் விளையாடும் அவர் தான் சந்தித்த 3–வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தெண்டுல்கர் 10 ரன்னில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். 

ஆனால் அவரது அவுட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெலிவிசன் ரீபிளேயில் பார்த்தபோது மிகவும் மேலாக செல்வது தெரிந்தது. அதாவது ஸ்டம்புக்கு மேலே செல்லக்கூடிய பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து நடுவர் லாங் இந்த தவறான முடிவை எடுத்து அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த மோசமான முடிவால் தெண்டுல்கர் ஏமாற்றம் அடைந்தார். 

அதோடு ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அவரது ஆட்டத்தை காண ஈடன்கார்டன் மைதானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

0 comments:

Post a Comment