இந்தியா - தென் ஆப்ரிக்கா தொடரில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின், இரண்டு போட்டிகளின் நேரத்தை, கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) மாற்றம் செய்துள்ளது. 
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

ஜோகனஸ்பர்க்கில் நடக்கும் முதல் ஒருநாள், செஞ்சூரியனில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடர் துவங்கும் போது தென் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 

அதனால் பெற்றோரும் குழந்தைகளின் விடுமுறையை கொண்டாட விடுப்பில் இருப்பார்கள். இந்த காரணத்தினால், இவ்விரு போட்டிகளையும் ஒருமணி நேரம் முன்னதாக துவங்க சி.எஸ்.ஏ., முடிவு செய்துள்ளது.

சி.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஜோகனஸ்பர்க், செஞ்சூரியன் போட்டிகள் பகல் இரவு ஆட்டமாக நடக்கும். விடுமுறை குறித்து சமீபத்தில் தான் தெரியவந்தது. 

அதனால் போட்டியை நேரத்திற்கு முடித்தால், விடுப்பில் உள்ள தென் ஆப்ரிக்க மக்கள் குடும்பத்துடன் போட்டியை காண முன்வருவர். இரண்டாவது, டெஸ்ட் போட்டிகளின் நேரத்தில் மாற்றம் இல்லை,'' என்றார். 

0 comments:

Post a Comment