பந்தை பார்த்தாலே பயம் - டுபிளசி

பந்தை நான் சேதப்படுத்தவில்லை. மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது,'' என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்தார்.
துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி, பந்தை பேன்ட் ஜிப்பின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக அம்பயர்கள் புகார் கூறினர். 

இதற்கு, டுபிளசிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து டுபிளசி கூறியது: நான் ஒரு நேர்மையான வீரர் என எனக்குத் தெரியும். கடந்த வாரத்தில் நடந்த சம்பவம் கடினமானதாக அமைந்துவிட்டது. 

மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது. தற்போது, பந்தை யாராவது என் மீது எறிந்தால் கூட அதை பார்க்கவே பயமாக இருக்கிறது. 

போட்டியின்போது, பந்தை விதிக்குட்பட்டுதான் கையாண்டேன். களத்திலிருந்த அம்பயர் கூட, பந்தை பரிசோதித்தார். 

தவறு எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். 

இவ்வாறு டுபிளசி கூறினார்.

0 comments:

Post a Comment