இந்திய அணியில் மீண்டும் ஜாகிர் - காம்பிருக்கு நோ

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 
இதில், நீண்ட நாட்களாக போராடிய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் இடம் பிடித்தார். துவக்க வீரர் காம்பிர் புறக்கணிக்கப்பட்டார். 

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜோகனஸ்பர்க் (டிச.5), டர்பன் (டிச.8), செஞ்சூரியன் (டிச.11) ஆகிய இடங்களில் நடக்கிறது. 

இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டி வரும் டிச.18ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதற்கு முன்கூட்டியே தயாராகும் விதமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அனுபவ ஜாகிர்கான் நீண்ட இடைவேளைக்கு பின் தேர்வு செய்யப்பட்டார். 

இவருடன் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விர்திமான் சகாவும், அம்பத்தி ராயுடு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காம்பிர் புறக்கணிக்கப்பட்டார். 

0 comments:

Post a Comment