சச்சின் சாதனையை தகர்த்தார் தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் தோனி, சச்சினின் சாதனையை தகர்த்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்காவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் தோனி முதலில், லியான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

அடுத்து பட்டின்சன் வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த தோனி, 224 ரன்கள் எடுத்த போது அவரிடமே சிக்கினார். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள்) பின்தள்ளி, தோனி முதலிடம் பிடித்தார். 

எதிர் முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ் குமார் (38) சிடில் வேகத்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 572 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. 

ஆஸ்திரேலிய அணிக்கு பட்டின்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

0 comments:

Post a Comment