இந்திய அணியில் சேவக்குடன் களமிறங்குவது யார்?


நாளை முதல் டெஸ்ட் துவங்கவுள்ள நிலையில், சேவக்குடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் தருவது யார் என்பது குறித்து "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. 

இதற்கான இந்திய வீரர்கள் நேற்று சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காம்பிருக்குப் பதில் இந்திய அணியில் துவக்க வீரர்களாக சேர்க்கப்பட்ட முரளி விஜய், ஷிகர் தவான் சேர்க்கப்பட்டனர். 

இதில் சேவக்குடன் இணைந்து யார் அணிக்கு துவக்கம் தருவது என, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்றைய பயிற்சியின் போது முதலில் வந்த முரளி விஜய், நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். 

ஷிகர் குழப்பம்:  பின் டில்லியின் ஷிகர் தவானும் பேட்டிங் பயிற்சி செய்தார். தொடர்ந்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் "டிரஸ்சிங்' அறைக்கு சென்றனர்.

மறுபடியும் பயிற்சிக்கு வந்த போது ஷிகர் தவானும் சேர்ந்து வந்தார். இதை பார்த்த போது, நாளை சேவக்குடன் யாரை களமிறக்குவது என, அணி நிர்வாகம் முடிவு செய்யாததை தெளிவாக காட்டியது.

இஷாந்த் சோர்வு: டிண்டா, புவனேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பவுலிங் பயிற்சி செய்தனர். இதில் இஷாந்த் சர்மா மட்டும் கடுமையான பயிற்சி காரணமாக சோர்வாக காணப்பட்டார்.

 சச்சின், விராத் கோஹ்லி, புஜாராவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா மற்றும் ரவிந்திர ஜடேஜா பவுலிங் செய்தனர். மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது, ஹர்பஜன் சிங் மட்டும் அவ்வப்போது தான் பவுலிங் செய்தார்.

0 comments:

Post a Comment