ஹர்பஜன் சிங்-ன் அடுத்த அவதாரம்


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சினிமா பட தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 32. சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த இவர், சக வீரர் அஷ்வினிடம் தன் இடத்தை பறிகொடுத்தார். 

அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.

இதற்கிடையே தனது நீண்ட நாள் நண்பரான சந்தன் மதனுடன் இணைந்து சினிமா தயாரிப்பாளராகும் கனவை நிறைவேற்றவுள்ளார். 

இது தொடர்பாக பஞ்சாபி படங்களில் அனுபவம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கை சந்தித்து ஹர்பஜன் பேசியுள்ளார்.

இது குறித்து சந்தன் மதன் கூறுகையில்,""ஹர்பஜன் சிங்குடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

முதலில் பஞ்சாபி படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

அது வெற்றி பெறும் பட்சத்தில், விரைவில் பாலிவுட் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். 

முதல் படம் வரும் மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். ஹர்பஜன் சிங்கிற்கு நடிக்க விருப்பம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை,''என்றார்.

0 comments:

Post a Comment