சர்ச்சையில் சிக்கினார் பிரவீன்குமார்


கிரிக்கெட் வாரியம் சார்பில் நடந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஓ.என்.ஜி.சி–வருமான வரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, ஓ.என்.ஜி.சி. அணிக்காக பிரவீன்குமார் களம் இறங்கினார்.
 
வருமானவரி அணி வீரர் அஜிதேஷ் ஆர்கல் பேட் செய்து கொண்டிருந்த போது, பிரவீன்குமார் ஷார்ட் பிட்ச்சாக வீசிய ஒரு பந்தை, நடுவர் நோ–பால் என்று அறிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், எதிரில் நின்ற அஜிதேசை தகாத வார்த்தைகளால் கண்டபடி திட்டிதீர்த்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் தனஞ்செய் சிங், ‘போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற சரியான மனநிலையில் பிரவீன்குமார் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
 
பிரவீன்குமார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா? என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டியிடம் கேட்ட போது, இது கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். 

தற்போதைய நிலைமையில் இந்த விஷயத்தில் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது’ என்றார்.

0 comments:

Post a Comment